இந்நிலையில், நேற்று சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரியை அவரது அலுவலகத்தில் சந்தித்து தனபால் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், அதிமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என கூறி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மேச்சேரி காவல்நிலையத்தில் பணம் கேட்டு என்னை அடித்து தாக்கிய இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
இதுபற்றி தனபால் நிருபர்களிடம் கூறுகையில் ‘‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது, கொள்ளையடிக்கச் சொன்னது யார்? கொள்ளையடித்து வந்த ஆவணங்கள் யார் யாரிடம்
கொடுக்கப்பட்டுள்ளது என்ற முழுவிவரத்தையும் அதிகாரிகளிடம் தெரிவிப்பேன்,’’ என்றார்.
The post அதிமுக மாவட்ட செயலாளர் மீது ஜெ. டிரைவரின் அண்ணன் புகார்: சேலம் டிஐஜியிடம் அளித்தார் appeared first on Dinakaran.