நெல்லை மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பாணதீர்த்த அருவியை பார்க்க 18ம் தேதி முதல் அனுமதி..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பாணதீர்த்த அருவியை பார்க்க 18ம் தேதி முதல் அனுமதியளித்துள்ளது. தமிழ்நாட்டின் காரையார் அணைக்கு சற்று மேலே அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றின் பாணதீர்த்தம் நீர்வீழ்ச்சி பிரசித்திபெற்றது. அணை வழியாக படகு சவாரி மூலமாக சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

ஆனால் பல்வேறு காரணங்களாலும், வனத்துறையின் நெருக்கடியாலும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து படகுகளும் அணையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் பாபநாசம் அணைக்கு மேல் உள்ள பாணதீர்த்த அருவியை பார்க்க வனத்துறை அனுமதித்துள்ளது. சுற்றுலா பயணிகள் காரில் சென்று பார்க்க ஏற்பாடு; நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

The post நெல்லை மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பாணதீர்த்த அருவியை பார்க்க 18ம் தேதி முதல் அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: