ரேஷன் கடை கட்டும் பணிகளை எம்எல்ஏ ஆய்வு

 

திருப்பூர், செப்.13: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, 44-வது வார்டு, பெரியகடை வீதி, பழனியம்மாள் பள்ளி எதிரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய ரேஷன் கடைக்கான பணிகளை விரைந்து முடிப்பது குறித்து, திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், பகுதி செயலாளர் மு.க.உசேன், வட்டக்கழக செயலாளர்கள் முகமது ரபீக், முகமது அலி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் மஸ்ஊது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரேஷன் கடை கட்டும் பணிகளை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: