மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேலூர், செப். 13: மதுரை- மேலூர் நான்கு வழிச்சாலையில் உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மாலை வட்ட பொது தொழிலாளர் சங்கம் மற்றும் டோல் பிளாசா தொழிலாளர்கள் சங்க கிளை இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. தாலுகா தலைவர் மணவாளன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக வேலை செய்த தொழிலாளிகளை எந்த விதமான சட்டப்படியான பணப்பலன் தராமல் வேலையில் இருந்து வெளியேற்றாதே, சட்டப்படியான பணப்பலன்களை உடனடியாக வழங்கு, தொழிலாளியை அலைக்கழிக்காதே, தொழிலாளர் விரோத போக்கை கைவிடு, வடமாநில தொழிலாளர்களை கருங்காலியாக பயன்படுத்தாதே என கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் அரவிந்தன், மாவட்ட உதவி தலைவர் சவுந்திரராஜன், தாலுகா செயலாளர் சேகர், பொருளாளர் பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: