பதவி ஏற்ற 108 நாட்களில் சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட் 51 கிளைகளில் ஆய்வு

புதுடெல்லி: சிபிஐயின் இயக்குநராக பதவியேற்ற பிரவீண் சூட் இதுவரை 51 சிபிஐ அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மத்திய புலனாய்வு அமைப்பின்(சிபிஐ) இயக்குநராக கர்நாடக காவல்துறை தலைவராக பணியாற்றி வந்த பிரவீண் சூட் கடந்த மே மாதம் 25ம் தேதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பதவி ஏற்ற 108 நாட்களுக்குள் நாடு முழுவதும் உள்ள 58 சிபிஐ கிளை அலுவலகங்களில் 51 கிளை அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆய்வு பணிகளின்போது அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுடனும் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி விசாரணைகளின்போது சிபிஐ அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவைகளை தீர்க்கும் வழிகள், ஆலோசனைகளை பிரவீண் சூட் கேட்டறிந்தார். மீதமுள்ள 7 கிளை அலுவலகங்களில் அக்டோபர் 15ம் தேதிக்குள் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள பிரவீண் சூட் திட்டமிட்டுள்ளார்.

The post பதவி ஏற்ற 108 நாட்களில் சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட் 51 கிளைகளில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: