பல வாகனங்கள் சுறுக்கி விழாமல் இருக்க மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரவில் பலர் தடுமாறியபடி செல்கின்றனர். இப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என பல துறையினர் குடியிருந்தபோதிலும் இந்த பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. தினம்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லக்கூடிய இந்த சுரங்கபாதையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்தப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் சாலமோன் கூறுகையில், ‘‘தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதை சீர்செய்து தருமாறு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசியுள்ளேன். நெடுஞ்சாலைதுறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளனர்,’’ என்றார்.
The post தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் பாசி படர்ந்த சாலையால் விபத்து: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
