அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் பரமக்குடி முருகேசன், மானாமதுரை தமிழரசி உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், மதிமுக சார்பில் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முதல்வருக்கு நன்றி
தியாகி இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடி சந்தைப் பகுதியில் ரூ.3 கோடியில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு இம்மானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபா ராணி மற்றும் தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தலைவர் பாலா, செயலாளர் புண்ணிய மூர்த்தி, பொருளாளர் முருகேசன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
The post இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி மரியாதை appeared first on Dinakaran.