கல்லூரி முதல்வர் பாலாஜி, துறை பேராசிரியர்கள் சத்யபிரியா, அசோகன் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர், காலிசாவுக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, இடுப்பிலிருந்து வலது தொடை வரை குத்தியிருந்த மூன்றரை அடி நீள இரும்பு கம்பியை வெளியே எடுத்து சாதனை படைத்தனர். தற்போது காலிசா மருத்துவமனையில் நலமுடன் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த அறுவை சிகிச்சை ஒரு சவாலாக, அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் மருத்துவ குழுவினர் விரைவாக செய்து முடித்துள்ளனர். கூலித்தொழிலாளியின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு கட்டிட ஊழியர்களும் குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.
The post ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொழிலாளி தொடையில் குத்திய கம்பியை அகற்றி சாதனை appeared first on Dinakaran.