இந்த நிலையில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரியும் நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தலை எப்படி நடத்துவது, உதவிக்கு யாரை அழைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு கடந்த 2 மாதங்களாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மதியம் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. இதையடுத்து, தேர்தல் தேதி எப்போது என்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் வழக்கறிஞர்கள் உள்ளனர்.
The post ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணை appeared first on Dinakaran.