பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம்: 31 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் (பொறுப்பு) அனைவரையும் வரவேற்றார். மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்டு, வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக பொது விவாதம் நடைபெற்றது.

இதில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், குளம் மேம்பாடு மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ள அனுமதி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.43.25 லட்சம் மதிப்பீட்டில் கசடு, கழிவு அகற்றும் வாகனம் வாங்கிக்கொள்ள அனுமதி, சவுட்டூரில் ரூ.44.60 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலைப் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், இளநிலை உதவியாளர் முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம்: 31 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: