தற்போது இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 53 ஊராட்சிகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை, சாலை வசதி, தெருவிளக்கு, பசுமை வீடுகள், சத்துணவு கூடம், அங்கன்வாடி என பல்வேறு பிரச்னைகள் குறித்த கோரிக்கைகளை கூற, ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்களும் ஊராட்சி செயலாளர்களும் இங்குதான் வர வேண்டும். இந்த அலுவலகத்தில் பிடிஒக்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊழியர்கள் என 80க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது உள்ள பிடிஒ அலுவலகத்தின் இடது புறத்தில் உள்ள பழைய பிடிஒ அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து செடி கொடிகள் படர்ந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தற்போதுள்ள வட்டார கல்வி அலுவலகத்திற்குள் நுழைகிறது. இதனால் அலுவலக ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகிறார்கள். எனவே, புதர் மண்டி கிடக்கும் பழைய பிடிஒ அலுவலக கட்டிடத்தை அகற்ற வேண்டும் என ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பெரியபாளையத்தில் 1961-ல் கட்டப்பட்டு புதர் மண்டி காணப்படும் பழைய பிடிஒ அலுவலகம்; விஷ ஜந்துக்கள் நடமாட்டம் appeared first on Dinakaran.