பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்எம்எல்ஏ மாங்குடி வழங்கினார்

தேவகோட்டை, செப். 3: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள நகரத்தார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு பள்ளிக்குழுத் தலைவர் முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் வரவேற்றார்.

தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத்தலைவர் ரமேஷ், நகர் திமுக செயலாளர், கவுன்சிலர் பெரி.பாலமுருகன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்கள் கவிஞர் அப்பச்சி சபாபதி, பூமினாதன்,தேவகோட்டை நகர்(கி) தலைவர் சஞ்சய், மாவட்டப் பொதுச்செயலாளர் ஆறாவயல் மகேந்திரன், மாநில இலக்கிய அணி செயலாளர் காரை வி.சாமிநாதன், காரைக்குடி சண்முகதாஸ்,வட்டார காங்கிரசை சேர்ந்த இளங்குடி முத்துக்குமார், கண்ணங்கோட்டை சிரவளினாதன், புளியால் ஜெய்னுதீன் ரஜாக், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்பிரவீன், மாணவர் காங்கிரஸ் தலைவர் தியோடர், நகர் காங்கிரஸ் வேலு, காளீஸ்வரன், சங்கர், வீரமணி, தேவகோட்டை நகர திமுக முன்னாள் கவுன்சிலர் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். துணைத்தலைமை ஆசிரியர் புகழ் நன்றி கூறினார்.

The post பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்எம்எல்ஏ மாங்குடி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: