நாக்பூரில் வீட்டு வேலைக்கு சென்ற 12 வயது சிறுமியை சிகரெட்டால் சுட்டு, இருட்டில் அடைத்த கொடூரம்: ஒருவர் கைது, போலீஸ் விசாரணை

நாக்பூர்: நாக்பூரில் 12 வயது சிறுமியை சிகரெட்டால் சுட்டு, வீட்டுக்குள் பூட்டி வைத்த கொடூரம் அரங்கேறி உள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் அதர்வ நகரி பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் பெங்களூருவில் இருந்து 12 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளனர். அந்த சிறுமி வீட்டு வேலையின்போது தவறு செய்ததாக கூறி அடிக்கடி சிறுமியின் உடல் பாகங்களை சூடான கரண்டி, சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி உள்ளனர்.

அண்மையில் அந்த நாக்பூர் குடும்பத்தினர் பெங்களூரு சென்றபோது சிறுமியை வீட்டுக்குள் அடைத்து பூட்டி விட்டு சென்றுள்ளனர். இருளிலும், பசியிலும் பாதிக்கப்பட்ட சிறுமி ஜன்னல் வழியாக அக்கம், பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஒருவரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாக்பூரில் வீட்டு வேலைக்கு சென்ற 12 வயது சிறுமியை சிகரெட்டால் சுட்டு, இருட்டில் அடைத்த கொடூரம்: ஒருவர் கைது, போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: