மதன்ராஜ் அந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு ரூ.9.50 லட்சத்துக்கு விற்று விட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி கேரள போலீசார், விக்னேஷ் வாங்கிய கார் திருட்டு வழக்கில் இருப்பதாக கூறி எடுத்து சென்றனர். இதனால் விக்னேஷ், மதன்ராஜிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதுதொடர்பாக மதன்ராஜ் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று மதுரையில் பதுங்கியிருந்த அன்புசெல்வம், அவரது நண்பர்கள் முருகன், ஆனந்த், மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
The post இணையதளம் மூலம் கார் விற்று மோசடி: 6 பேர் கைது appeared first on Dinakaran.