இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அனில் குமார், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். தொடர்ந்து அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், அனில் குமாரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மாணவர் தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், தீயணைப்புத் துறையினர் வந்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அதன்பின் மாணவரின் சடலத்தை கைப்பற்றினோம். ஏதேனும் தற்ெகாலை குறிப்பு கடிதம் உள்ளதா? என்பதை தேடி வருகிறோம். ஐஐடி-யின் டீன், தலைமை பாதுகாப்பு அதிகாரி, விடுதி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தற்கொலை என்பது உறுதியாகி உள்ளது. பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
The post டெல்லி ஐஐடி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.