காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று காதலன் தற்கொலை முயற்சி

திருப்பூர்: காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று காதலன் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனை வரவேற்பாளராக இருந்த சத்யஸ்ரீ (21) மற்றும் நரேந்திரன் (25) இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை மருத்துவமனைக்கு சென்ற நரேந்திரன், அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தில் அறுத்து, பின்னர் தனது கழுத்திலும் அறுத்துக்கொண்டார். சத்யஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று காதலன் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: