மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, பல நகரங்களில் பொதுமக்களும் தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கராச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டனர். அப்போது மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்களில் சிலர் மின் கட்டண ரசீதை கொளுத்தினர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் பெட்ரோல்,ட டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்ந்து இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
The post ஒரு யூனிட் மின்சாரம் ரூ.68 ஆக உயர்வு.. பாகிஸ்தானில் வெடித்தது போராட்டம்… மின் கட்டண ரசீதை கொளுத்தும் பெண்கள்!! appeared first on Dinakaran.