கபிஸ்தலம் பகுதியில் லையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை

கும்பகோணம், செப்.1: தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் பகுதியில் பாபநாசம் தனியார் தொண்டு நிறுவன மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாபநாசம் தனியார் தொண்டு நிறுவன தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். துணை ஆளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் செங்குட்டுவன் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள நிழற்குடைகளை சாலையோரம் வியாபாரம் செய்யும் நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தனியார் தொண்டு நிறுவன மாவட்ட செயலாளர் சரவணன், முன்னாள் தலைவர்கள் அன்பழகன், ஃபிரான்சிஸ் சேவியர், விவேகானந்தன், ராயல் அலி, சுப்பிரமணியன், அறிவழகன் மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் மற்றும் வினோத்குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

The post கபிஸ்தலம் பகுதியில் லையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை appeared first on Dinakaran.

Related Stories: