கடம்பன் துறை திருப்பதி சாமி மடத்தில் பவுர்ணமி பூஜை சிறப்பு ஹோமம்

குளித்தலை, ஆக.31: குளித்தலை கடம்பன் துறை திருப்பதி சாமி மடத்தில் பவுர்ணமி பூஜை சிறப்பு ஹோமம் நடந்தது.கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன் துறை பகுதியில் அமைந்துள்ளது திருப்பதி சாமி மடம். இதில் பவுர்ணமி தினத்தன்று சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர ஹோமம் நடைபெற்று நவக்கிரகங்களுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கண்ணாடி பூஜை விமர்சையாக நடைபெற்றது. இறுதியாக சுவாமி அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post கடம்பன் துறை திருப்பதி சாமி மடத்தில் பவுர்ணமி பூஜை சிறப்பு ஹோமம் appeared first on Dinakaran.

Related Stories: