பூலித்தேவரின் பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு..!!

தென்காசி: பூலித்தேவரின் பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 1ல் கொண்டாடப்படுகிறது. நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை போடப்பட்டுள்ளது.

The post பூலித்தேவரின் பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: