பால் புரஷ்கார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

 

ஈரோடு,ஆக.29: ஈரோடு மாவட்டத்தில் தன்னலமற்ற துணிச்சலான செயல்களை மற்றும் செயற்கரிய திறன் மற்றும் சாதனை செய்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஷ்கார் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய ஏதாவது ஒரு துறையில் தனித்தன்மை, தன்னலமற்ற துணிச்சலான செயல்களை மற்றும் செயற்கரியதிறன் மற்றும் சாதனைசெய்த 18 வயதுக்குட்பட்ட குழந்தையாக, இந்திய நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வருகிற 31ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் 6வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

The post பால் புரஷ்கார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: