இதுபற்றி அறிந்த தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலைபார்க்கும் தினேஷின் மூத்த சகோதரர் விக்கி (26) என்பவர், தனது தம்பியை கத்தியால் சரமாரி வெட்டிய ஆகாஷை பழிக்கு பழி வாங்க தீர்மானித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ராயபுரம், ராபின்சன் பூங்கா அருகே நடந்து சென்ற ஆகாஷை, விக்கி வழிமறித்து கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.
தகவலறிந்த ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து படுகாயமடைந்த ஆகாஷை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான விக்கியை தேடி வருகின்றனர்.
The post ராயபுரத்தில் பழிக்குப்பழியாக தம்பியை சரமாரி வெட்டிய வாலிபருக்கு கத்திக்குத்து: அண்ணனுக்கு வலை appeared first on Dinakaran.