ஆக.30-ல் சகோதரத்துவத்தை வலிறுத்தும் ரக்ஷா பந்தன் விழா: சந்திராயன் வடிவ ராக்கி கயிறுகளை வாங்க இளைஞர்கள் ஆர்வம்

டெல்லி: சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய பெருமையை கொண்டாடும் விதமாக டெல்லியில் உள்ள சந்தைகளில் சந்திரயான் வடிவ ராக்கி கயிறுகள் விற்பனை கலைக்கட்டியுள்ளன. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் நாளை மறுநாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சகோதர, சகோதரிகள் ராக்கி கயிறை கட்டி தங்களது அன்பை பரிமாறி கொள்வர். ரக்ஷா பந்தன் விழாவையொட்டி சந்தைகளில் ராக்கி கயிர்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக புதுவரவு ராக்கெட் கயிறுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டெல்லியில் உள்ள சந்தையில் சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றிகரமாக நிலவை தரையிறக்கி சாதனை படைத்த இந்தியாவின் விண்வெளி சாதனையின் பெருமையை கொண்டாடும் விதமாக சந்திராயன்-3 சித்தரிக்கும் வடிவமைப்புகளுடன் கூடிய ராக்கிகளை ஏராளமானோர் வாங்கி மகிழ்ந்தனர். சந்தைகளில் புதுவரவாக உள்ள பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற வடிவிலான ராக்கி கயிறுகளையும் வாங்க இளைஞர்கள் ஆர்வம் செலுத்தினர்.

The post ஆக.30-ல் சகோதரத்துவத்தை வலிறுத்தும் ரக்ஷா பந்தன் விழா: சந்திராயன் வடிவ ராக்கி கயிறுகளை வாங்க இளைஞர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Related Stories: