ரூ.1786 கோடி மோசடியில் 2 இயக்குனர்கள் கைது

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் பொன்சி திட்டத்தின் மூலமாக ரூ.1786கோடியை திசைதிருப்பியது தொடர்பான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எம்பிஎஸ் கிரினரி டெவலப்பர்ஸ் லிமிடெட் இயக்குனர்கள் பிரபீர் குமார் சந்தா மற்றும் பிரணாப் குமார் தாஸ் ஆகியோரை 24ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இருவரையும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ரூ.1786 கோடி மோசடியில் 2 இயக்குனர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: