மதுரையில் ரயிலில் தீ விபத்து; நாளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு..!!

மதுரை: மதுரையில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி எரிந்த இடத்தில் நாளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி நாளை சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார். நாளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையில் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர்கள், விபத்தை பற்றி தகவல் தெரிந்தவர்கள் பாதுகாப்பு ஆணையரை சந்தித்து தகவல் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரையில் ரயிலில் தீ விபத்து; நாளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: