திருவிடைமருதூர் அருகே சிறுமியிடம் சில்மிஷம் கூலித்தொழிலாளி கைது

 

திருவிடைமருதூர், ஆக. 25: திருவிடைமருதூர் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் கடந்த ஒரு மாதமாக சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளா, திருவிடைமருதூர் எஸ்.ஐ தன்ராஜ், திருநீலக்குடி சிறப்பு எஸ்ஐ முருகானந்தம் ஆகியோர் விசாரணை நடத்தினர். ராஜேந்திரனை நேற்று கைது செய்தனர். பின்னர் திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரன் புதுக்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டார்.

The post திருவிடைமருதூர் அருகே சிறுமியிடம் சில்மிஷம் கூலித்தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: