ரஷ்யா வாக்னரின் பிரிகோஜினுக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஆதரவாளர்கள் அஞ்சலி..!!

விமான விபத்தில் கொல்லப்பட்டதாக கருதப்படும் வாக்னரின் பிரிகோஜினுக்கு செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நேற்று விபத்துக்குள்ளான விமானத்தில் ரஷ்யாவின் கூலிப்படையான யெவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்துள்ளார் என்ற செய்தியை அடுத்து, அதிகாலை வாக்னர் கூலிப்படையின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அலுவலகத்திற்கு அருகில் மலர்கள் வைத்து மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. வாக்னர் கூலிப்படையின் தலைவரும், ராணுவத்தின் தலைமையின் எதிரியாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டவருமான பிரிகோஜினின் கதி குறித்து கிரெம்ளின் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

The post ரஷ்யா வாக்னரின் பிரிகோஜினுக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஆதரவாளர்கள் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Related Stories: