கூட்டம் காரணமாக கோயிலின் உள்ளே செல்ல முடியாத மணமக்கள் வளாகத்தின் முன்பகுதியிலும், பிரகாரங்களில் நின்றவாறு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோயில் வளாகம் திருமண வீட்டினர் மற்றும் உறவினர்களால் களைகட்டி இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் திணறினர். சன்னதி தெரு, ரத வீதிகள் உள்ளிட்ட திருச்செந்தூரில் முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் திருமணங்கள் அரங்கேறியதால் நகர் முழுவதும் நெரிசல்கள் காணப்பட்டது.
The post திருச்செந்தூரில் இன்று மட்டும் 200-கும் மேற்பட்ட திருமணங்கள்: ஆவணி வளர்பிறை என்பதால் களைகட்டிய திருமண வைபவங்கள் appeared first on Dinakaran.
