இதைப் பற்றி டிவிட்டரில் குறிப்பிட்ட ராகுல், ‘‘எனது தந்தை அடிக்கடி கூறுவார், உலகிலேயே மிக அழகான இடம் பாங்காங் ஏரி என்பார். எனவே அவரது பிறந்தநாளை அங்கேயே சென்று கொண்டாட உள்ளேன். ஏற்றமோ, இறக்கமோ தடுக்க முடியாதது!’’ என பதிவிட்டுள்ளார். மேலும், ராகுல் தனது கேடிஎம் 390 பைக்கில் ஹெல்மெட் கிளவுஸ், ரைடிங் பூட்ஸ், ஜாக்கெட் என சகல பாதுகாப்புடன் பயணித்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் பைக் மெக்கானிக்களிடம் பேசிய ராகுல், தன்னிடம் கேடிஎம் 390 பைக் இருப்பதாகவும் அதை ஓட்ட பாதுகாவலர்கள் அனுமதிப்பதில்லை எனவும் கூறியிருந்தார். அந்த புத்தம் புதிய பைக்கில் தான் லடாக்கில் அவர் பயணித்துள்ளார். இந்த பைக் அதிகபட்சம் மணிக்கு 155 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.
The post தந்தை ராஜிவ் பிறந்தநாளை கொண்டாட லடாக்கில் பைக்கில் சென்ற ராகுல் காந்தி appeared first on Dinakaran.