வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் ஆனந்த்ராஜ் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டை உடைத்து 30 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வீட்டை உடைத்து 30 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை: உசிலம்பட்டியில் பரபரப்பு appeared first on Dinakaran.