இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், ஆர்.சி, காப்பீட்டு சான்றிதழ், மாசு சான்றிதழ் போன்ற அடையாள அட்டைகள் இருந்தால் மட்டுமே வனப்பகுதிக்குள் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக, பேரிஜம் ஏரிக்கு செல்ல ஒருநாளைக்கு 50 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
The post பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் நாளை திறப்பு appeared first on Dinakaran.