மதுரை: தூத்துக்குடி விமானத்தில் தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட சோபியா மீதான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. சென்னை பெருநகர காவல்துறைக்கான சட்டப்பிரிவை தூத்துக்குடி போலீஸ் பயன்படுத்தியதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2018ல் பாஜக மாநில தலைவராக தமிழிசை பதவிவகித்தபோது அவருக்கு எதிராக முழக்கமிட்டவர் லூயிஸ் சோபியா.