பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து பயணம்

புதுடெல்லி: வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து புறப்பட்டு சென்றது. காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த பும்ரா, தற்போது முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகி உள்ளார். இதையடுத்து, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அயர்லாந்து தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் நேற்று டெல்லியில் இருந்து டப்ளின் பயணமாகினர்.

3 டி20 போட்டிகளும் டப்ளின், மலாஹைடு அரங்கில் ஆக. 18, 20, 23 தேதிகளில் நடைபெற உள்ளன. இந்திய அணி: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷாபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

The post பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து பயணம் appeared first on Dinakaran.

Related Stories: