அனுமதியின்றி பாஜவினர் பேரணி

கிருஷ்ணகிரி, ஆக.15: கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜவினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 14ம் தேதியை பாஜவினர் தேசப்பிரிவினை நாளாக கடைபிடிக்கின்றனர். இந்த நாளுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜ., சார்பில், நேற்று காலை கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் இருந்து பழையபேட்டை காந்தி சிலை வரை மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன் தலைமையில் மவுன பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பேரணி துவங்கியதும், அனுமதி இல்லை எனக்கூறி பாஜவினர் 26 பேரை போலீசார் கைது செய்து, பழையபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில், மாவட்ட பொதுச் செயலாளர் மீசை அர்ச்சுனன், நகர தலைவர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட பிரசார பிரிவு துணை தலைவர் தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post அனுமதியின்றி பாஜவினர் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: