ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க 85வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்

 

ராஜபாளையம், ஆக.15: ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க 85வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பிஎஸ் குமாரசாமி ராஜா மண்டபத்தில் நடைபெற்றது. வர்த்தகர் சங்க தலைவர் ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட் ராமராஜா தலைமை வகித்தார். சங்க துணை தலைவர் பத்மநாபன் வரவேற்று பேசினார். செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். உலக மாரத்தான் போட்டியில் சாதனை புரிந்தவர்களை பொருளாளர் ராமராஜ் பாராட்டினார். ராம்கோ குரூப் சேர்மன் தொழில் வர்த்தக சங்க தலைவர் பி.ஆர்.வெங்கட் ராமராஜா மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினர்.

செயலாளர் நாராயணசாமி, முதன்மை விருந்தினரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தலைவர் பி.ஆர்.வெங்கட் ராமராஜா, முதன்மை விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பேசினார். பின்னர் மீண்டும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க தலைவராக ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா, துணைத் தலைவர்களாக கண்டன் ராஜா, பத்மநாபன், செயலாளராக வெங்கடேஸ்வர ராஜா, நாராயணசாமி, பொருளாளராக ராமராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைவாக இணைச் செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

The post ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க 85வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: