ஆலந்தூர்:சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலையிலான போலீசார், டிரஸ்ட்புரம் பகுதியில் கண்காணித்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் சுற்றிதிரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கேரளா மாநிலம் திருச்சூர் கடப்புரம் பகுதியை சேர்ந்த முகமது பாசில் (24) என்பதும் அப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்பவர் என்பதும் தெரியவந்தது. அவர் வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.