தெலங்கானாவில் பிஎப்ஐ நிர்வாகி வீட்டில் என்ஐஏ திடீர் சோதனை

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் பிஎப்ஐ அமைப்பு நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் உள்ள ஹூசைன்புரா பகுதியில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பின் முக்கிய நிர்வாகி தப்ரேஸ் என்பவரது வீடு உள்ளது. தற்போது, தப்ரேஸ் துபாய் நாட்டில் இருக்கும் நிலையில், அவருக்கு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக என்ஐஏவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், என்ஐஏ அதிகாரிகள் கரீம் நகரில் உள்ள தப்ரேஸ் வீட்டில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் என்ஐஏ அதிகாரிகளுடன் உள்ளூர் போலீசாரும் இருந்தனர். காலை 8.30 மணியளவில் சோதனையை முடித்து கொண்ட என்ஐஏ அதிகாரிகள், தப்ரேஸ் வீட்டில் இருந்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

The post தெலங்கானாவில் பிஎப்ஐ நிர்வாகி வீட்டில் என்ஐஏ திடீர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: