யாழ்ப்பாணம் சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 9 பேரும் நேற்று காலை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை செய்த நீதிபதி, மீனவர்கள் 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு சில தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலங்கை கடற்படை சிறைபிடித்த மண்டபம் மீனவர் 9 பேர் விடுதலை appeared first on Dinakaran.
