அப்போது திருவொற்றியூர் பலகை தொட்டிகுப்பம் அருகே வரும்போது பைக்கை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க கடற்கரை நோக்கி சென்றபோது இரண்டு பேர், சம்சுதீன் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பினர். இதையடுத்து சம்சுதீன் திருடர்களை பிடிக்க விரட்டிச்சென்றபோது கால் தடுக்கி கீழே விழுந்தார். இதை பயன்படுத்தி கொண்ட திருடர்கள் பைக்கில் தப்பிச்சென்று விட்டனர்.
இதுசம்பந்தமாக சம்சுதீன் கொடுத்த புகாரின்படி, திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கோபி வழக்குபதிவு செய்து விசாரித்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பதிவுகளை வைத்து சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த பிரபல வழிப்பறி திருடர்கள் சண்முகநாதன்(31), அரிதாஸ் (34), மோகனசுந்தரம்(35) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதன்பிறகு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post திருவொற்றியூர் பகுதியில் செல்போன் திருடர்கள் 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.