இன்னொரு தீவிரவாதி தப்பியோட முயற்சித்தான். அப்போது அவன் மீது துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தான். இதில் ஒரு தீவிரவாதி உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘‘ சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தலைவனான முனேசர் உசேன் என்பது தெரியவந்தது. இவன் 1993ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று அங்கு ஆயுத பயிற்சி பெற்ற பின் காஷ்மீருக்கு வந்து பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளான்’’ என்றார்.
* பாகிஸ்தான் நபர் கைது
பாலகோட் செக்டரில் எல்லை கோடு வழியே இந்தியாவுக்குள் ஊடுருவிய அபு வகாப் அலி(22) என்பவரை பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர். அவர் தவறுதலாக இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
The post காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி தீவிரவாத இயக்க தலைவனை சுட்டு கொன்றது ராணுவம் appeared first on Dinakaran.