இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுகவில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு, நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, மாநாட்டு குழு உறுப்பினர்களும், மாவட்ட செயலாளர்களும் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வருகிற 17ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதியான வாய்ப்பாகும்.
புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்றுள்ள அதிமுகவினர் மட்டுமே, கட்சி பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், அமைப்பு தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள்.
The post அதிமுகவில் உறுப்பினர் பதிவை 17ம் தேதி வரை புதுப்பிக்கலாம்: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.