இந்தியா கூட்டணிக்கு எதிராக வழக்கு: டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: இந்தியா கூட்டணிக்கு எதிராக கிரிஷ் பரத்வாஜ் என்பவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவானது டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பு வாதத்தில், ‘‘அனைத்து மாநிலங்களும் அடங்கியது தான் பாரதம். அது தான் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பாஜவுக்கு எதிரான 26 எதிர்கட்சிகள் இந்தியா என்று தங்களது கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளனர். இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் தலையிட்டு, இந்தியா என்ற பெயருக்கு தடை விதிக்க வேண்டும்’’என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரரின் கோரிக்கைக்கு இந்திய தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post இந்தியா கூட்டணிக்கு எதிராக வழக்கு: டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: