9ம் தேதி ஆடிக்கிருத்திகை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகின்ற 9ம் தேதி புதன்கிழமை ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாட்கள் செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ்வராது என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 9ம் தேதி செயல்படவேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற 26ம் தேதி சனிக்கிழமை அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post 9ம் தேதி ஆடிக்கிருத்திகை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: