விபத்தில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே முதலபொழி மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாக மீனவர்கள் புகார் கூறினர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 முறை படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கடந்த மாதம் மீனவர்கள் சென்ற படகு அலையில் சிக்கி கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகினர். அங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பதால் துறைமுக முகத்துவரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post திருவனந்தபுரம் அருகே கடலில் ராட்சத அலையில் சிக்கி மேலும் ஒரு படகு கவிழ்ந்தது: 16 மீனவர்களுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் காயம் appeared first on Dinakaran.
