பெண்களின் வளர்ச்சிக்கு, நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்மு சிறந்த உதாரணமாக திகழ்கிறார். சாதாரண ஏழை பழங்குடியின குடும்பத்தில் பிறந்த முர்மு தற்போது,உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக உள்ளார். உலகின் 2வது பெரிய ராணுவ படையின் தலைவர் பொறுப்பை அவர் வகிக்கிறார். நாட்டில் உள்ள 10 லட்சத்து 40 ஆயிரம் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களில் 46 சதவீதம் பேர் பெண்கள். 80 சதவீத நர்சுகள், பேறுகால பணியாளர்களும் பெண்களாக உள்ளனர். முத்ரா திட்டத்தில் கடன் பெற்ற 70 சதவீத பயனாளிகள் பெண்கள் ஆவர். அதே போல் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்திலும் 80 சதவீத பயனாளிகளாக உள்ளனர்’’ என்றார்.
The post பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் வளர்ச்சிக்கு முக்கியமானது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.