தற்போதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் பிஎப்ஐ அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள மஞ்சேரியில் திடீர் சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள கிரீன்வேலி அகாடமி என்ற நிறுவனத்தில் நடத்திய சோதனையில் அங்கு பிஎப்ஐ அமைப்பினர் வெடிகுண்டு உள்பட ஆயுத பயிற்சி முகாம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 18 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் இருந்தன. இங்கு தான் பிஎப்ஐ அமைப்புக்கு தொடர்புடைய பலர் தலைமறைவாக இருந்தனர் என்றும் தெரியவந்தது. அங்குள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் சீல் வைத்த என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பின் ஆயுத பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு: என்ஐஏ அதிரடி appeared first on Dinakaran.