சென்னை: சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்த நாகையைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு விதிகளை மீறி விமானத்திற்குள் தொடர்ந்து புகை பிடித்து வந்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விமானம் சென்னையில் தரையிறங்கியதும் விமான நிலைய போலீசில் வைத்தியநாதனை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.