ஆடி ஏகாதசி கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

வேலாயுதம்பாளையம், ஜூலை 29: ஆடி மாத ஏகாதசியை முன்னிட்டு, கரூர் மாவட்டம், நொய்யல் அருகே கோம்புபாளையத்தில் உள்ள தேவி, பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சீனிவாசபெருமாள் கோயிலில் சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மலர்கள், துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் துளசி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post ஆடி ஏகாதசி கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: