மாநில இறகுப்பந்து போட்டி

மதுரை, ஜூலை 28: தமிழ்நாடு இறகுப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் மற்றும் பெருங்குடியில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த வாரம் துவங்கியது. போட்டிகளை மதுரை இறகுப்பந்து சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஒற்றையர், இரட்டையர் ஆண் மற்றும் பெண், கலப்பு இரட்டையர்களுக்கான 15 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு போட்டிகள் நடந்தன.

இப்போட்டியில் மதுரை, கோவை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பெருங்குடியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் இறுதிப்போட்டிகள் நேற்று நடந்தன. இதில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை சீனியர் தலைவர் கோபாலகிருஷ்ணன், தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

The post மாநில இறகுப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: