மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தொண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

தொண்டி, ஜூலை 28: தொண்டியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பட்டானி மீரான் தலைமையில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, தலைமை பிரதி நிதி மண்டலம் ஜெய்னுலாப்தின், வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயூப்கான், ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பீர் முகம்மது வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் சனாவுல்லா மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவாக பேசினார்.

ஒன்றிய அரசை கண்டித்து செல்போனில் டார்ச் லைட் அடித்து கோஷம் எழுப்பினர். திமுக ஒன்றிய செயலாளர் ராஜாராம், இந்து பரிபாலன சபை ராஜா, தொண்டி பங்குதந்தை வியாகுல அமிர்தராஜ், தமுமுக மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, தொண்டி ராஜ் உட்பட கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்தியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தொண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: